Tuesday 7th of May 2024 11:16:02 PM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்கா - டென்னசி மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

அமெரிக்கா - டென்னசி மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!


அமெரிக்கா - டென்னசி மாகாணத்தின் மத்திய பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி நேற்று சனிக்கிழமை இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், 31 பேர் காணாமல் போயுள்ளதாக டென்னசி அவசர முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளவர்களைத் தேடும் பணிக்கு உதவ சனிக்கிழமை இரவு ஒரு ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டது.

மத்திய டென்னசியில் யாரேனும் வாகனங்களில் பயணம் செய்யவே அல்லது வெள்ளம் சூழ்ந்த வீதிகள் மற்றும் நடைபாதைகளைக் கடக்கவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்துவரும் இடியுடன் கூடிய பலத்த மழை மேற்கு-மத்திய டென்னசி பகுதிகளுக்கு திடீர் வெள்ள அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்கு உதவ ஹெலிகப்டரை அனுப்பியுள்ளதாக டென்னசி மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE